கரூரில் நடைபெற்ற 67வது சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள்

கரூரில் 67வது மாநில சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.

கரூர் அரவக்குறிச்சியை அடுத்த வேலாயுதம்பாளையத்தில், கபடி கழகம் சார்பில் நடத்தப்பட்ட  போட்டியினை  நடிகை வரலட்சுமி சரத்குமார் துவக்கி வைத்தார். நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டியில்  பங்கேற்க தமிழகத்திலிருந்து சென்னை, திருச்சி, ஈரோடு  கரூர் உள்ளிட்ட 32 மாவட்ட  அணிகள் இடம்பெற்றுள்ளன. போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடிய 12 வீரர்கள், தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு, முதல் பரிசாக 1 லட்ச ரூபாயும், 2வது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், 3வது பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

Exit mobile version