கோவில்பட்டியில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு – கரூர் கும்பல் அராஜகம் !

கோவில்பட்டியில் 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகின்றன. மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் மாமூல் தர வேண்டும் என பார் உரிமையாளர்களை கரூரை சேர்ந்த கும்பல் மிரட்டி உள்ளது. இதற்கு பார் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அதிருப்தி அடைந்த கரூர் கும்பல், டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு நெருக்கடி கொடுத்து, கோவில்பட்டியிலுள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை மூட வைத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான பார்களை ஏலம் எடுத்திருப்பது திமுக நிர்வாகிகளே என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், திமுகவினருக்கே இந்த நிலையா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Exit mobile version