கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் வசித்த வடிவேல், அதிமுகவில் 38 வது வார்டு கழக செயலாளராக இருந்து வந்தார். இவர் கரூர் நகரிலிருந்து ராயனூரில் உள்ள தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருமாநிலையூர் அருகில் சென்று கொண்டிருந்த அவரை 3 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த வடிவேலுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி வடிவேல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடியா ஆட்சியில் தினந்தோறும் அரங்கேறும் கொலை சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிவருவதாக குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், கொலையாளிகளை உடனடியாக கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுக பிரமுகர் வெட்டி கொலை !
-
By Web team

Related Content
செந்தில்பாலாஜியின் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை!
By
Web team
May 30, 2023
விஏஓ கொலைக்கு ஆறுதல் கூற வராதவர், தோனியின் சிக்ஸை பார்க்க மட்டும் விசிட் அடிப்பது ஏனோ?
By
Web team
May 1, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. அரசு ஊழியர்களின் உயிருக்கு பாதுகாப்பு தர முடியாமல் திணறும் ஸ்டாலின் அரசு!
By
Web team
April 28, 2023
பொதுத்தேர்வு எழுதப்போகும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுச்செயலாளர் அவர்கள் வாழ்த்து..!
By
Web team
April 6, 2023