முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அவதூறாக திமுக கவுன்சிலர்கள் பேச்சு!

கரூர் மாநகராட்சி அரங்கத்தில் மேயர் கவிதா தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்கள் குறைகளை எடுத்துரைத்தனர். அப்போது, திமுக கவுன்சிலர்கள் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை அவதூறாக பேசியதாக தெரிகிறது. அப்போது குறுக்கிட்டு பேசிய 14வது வார்டு அதிமுக கவுன்சிலர் சுரேஷ், விடியா திமுக ஆட்சியில் சாலை போடாமலேயே சாலை அமைத்ததாக கூறி 3 கோடி ரூபாய் மக்கள் பணத்தை ஏமாற்றியதை, முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆதாரத்துடன் வெளியிட்டதாக தெரிவித்தார். இதனால் திமுக – அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Exit mobile version