திமுகவின் விடிவுகாலம் முடியப்போகிறது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கண்டன உரை!

அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எழுச்சியுரை! 

திமுக ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். அதிமுக ஆட்சி இருக்கும் வரை எந்த தீய சக்தியும் தமிழகத்தில் நுழையவில்லை. கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம் போன்றவை அம்மாவின் ஆட்சிகாலத்தில் வழக்கொழிந்து போனது. ஆனால் திமுக ஆட்சியில் இது பெருக்கெடுத்துள்ளது. அத்திக்கடவு- அவினாசி திட்டம் போன்ற திட்டத்தை அதிமுக கொண்டுவந்தது. ஆனால் திமுக அதனை தடுத்துவிட்டது.

2026 ஆம் தேர்தலில் அதிமுக பெரிய வெற்றிப் பெற்று திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றும். கள்ளச்சாராய சாவுகள், பாலியல் அத்துமீறல்கள், கொள்ளை, கொலை என்று சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.

Exit mobile version