செந்தில்பாலாஜியின் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை!

கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடந்த திங்களன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு கொடுத்ததன் எதிரொலியாக செந்தில்பாலாஜி சம்மந்தப்பட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனையானது ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று அமைச்சர் செந்தில்பாலாஜியின் கரூர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version