தனியார் நிதி நிறுவன ஊழியர் வெட்டி கொலை : 4 பேர் கைது

கோபிச்செட்டிபாளையத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியரை வெட்டி கொலை செய்த வழக்கில், நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் நாயக்கன்காடு பகுதியில், தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கடனை வசூல் செய்யும் ஊழியராக, சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி,4 பேர் கொண்ட கும்பல் திடீரென அலுவலகத்திற்குள் புகுந்து, கையில் வைத்திருந்த கத்தியால் சண்முகத்தை வெட்டியுள்ளனர். இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஈரோட்டைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version