போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் என்கிற 14 வயது சிறுவன், சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்தாக கூறப்பட்டுள்ளது. பின்னர் சிறுவனின் உடல், பிரேத பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், கட்டையாலும், கல்லாலும் தாக்கப்பட்டதால் வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் விஜயகுமார், ஊழியர்கள் யுவராஜ், டில்லிபாபு, ஜீவிதன் ஆகியோரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Exit mobile version