மதுரை: உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட மூன்றரை கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி மதுரை முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் முமுவீச்சில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதையொட்டி, மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே நள்ளிரவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த பிரவீன் சிங் என்பவரது காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அவரது காரில் உரிய ஆவணங்களின்றி 3.5 கிலோ தங்கக் கட்டிகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தங்கம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version