துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 71 லட்சம் மதிப்பிலான 2 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அமீர் தெக்குல்லாகண்டி, ஹாரூண் நகார் மொயாத் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது ஜாவித்முசார் என்பவர் 26 கிலோ குங்கும பூக்களை கடத்தி வந்துள்ளார்.

விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற சோதனையில் 1 கோடியே 35 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version