சீர்காழியில் 21 டன் வெங்காயம் பறிமுதல்: தேர்தல் பறக்கும்படை நடவடிக்கை

நாகை மாவட்டம் சீர்காழியில் தேர்தல் பறக்கும் படையினர் 21 டன் வெங்காயத்தை பறிமுதல் செய்தனர்.

சீர்காழியில் உள்ளாட்சி தேர்தல் முதல்கட்டமாக 27ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திட்டை பகுதியில் ஆவணங்கள் இன்றி வெங்காயம் ஏற்றி வந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து  சீர்காழிக்கு 21 டன் வெங்காயம் லாரியில் ஏற்றி வரப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வெங்காயத்தின் மதிப்பு 12 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version