விருதுநகரில் பிரசாரத்திற்கு வந்த பெண்களுக்கு பணம் கொடுத்த திமுகவினர்

விருதுநகர் காரியாப்பட்டி அருகே பிரசாரத்திற்கு வந்த பெண்களுக்கு பணம் கொடுத்த திமுகவினரை தேர்தல் பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பிரசாரத்திற்கு வருகை தந்த பெண்களுக்கு திமுகவினர் பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பான தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற தேர்தல் அதிகாரி மகேஸ்வரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், பெண்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பிரசாரத்தில் பங்கேற்ற பெண்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, திமுகவினர் மீது மல்லாங்கிணறு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version