`திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்’ – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு!

தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு மக்கள் முடிவுகட்டவேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, தொகுதிக்குட்பட்ட பாப்பான்குளத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அதிமுக அரசு தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களை, பட்டியலிட்டு அமைச்சர் உரையாற்றினார்.

உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் மக்களுக்காக என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார். தி.மு.கவில் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி என குடும்ப அரசியலின் பட்டியல் நீண்டுகொண்டு போவதாக விமர்சித்தார்.

 

Exit mobile version