தேர்தல் பறக்கும் படை போல நடித்து ரூ.20 லட்சம் கொள்ளை

மதுரையில் தேர்தல் பறக்கும் படையினர் போல நடித்து 20 லட்சம் ரூபாய் கொள்ளையடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் சரவணக்குமார்,ஆனந்தன் ஆகியோர் மதுரையில் உள்ள தங்களுடைய தலைமை அலுவலகத்தில் பணத்தை செலுத்துவதற்காக பேருந்தில் வந்தபோது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

மதுரை வரிச்சியூர் பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த 4 பேர் கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். நிதி நிறுவன ஊழியர்கள் பணம் கொண்டு வருவது அந்த கும்பலுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கருப்பாயூரணி போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version