பாக்., இந்த ஆண்டில் 2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது: இந்திய ராணுவம்

பயங்கரவாதிகளை, இந்தியாவிற்குள் ஊடுருவ செய்ய, பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் 2 ஆயிரத்து 50 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதில் 21 பேர் உயிர் இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கு இந்தியா உரிய பதிலடி கொடுத்து வருவதுடன், பயங்கரவாதிகள் ஊடுருவலை முறியடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version