10 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த காவலர்கள் சிலர் உடல் நலக்குறைவு, சாலை விபத்து மற்றும் தீ விபத்தில் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த 10 காவலர்களின் குடும்பத்தினருக்கு, தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

10 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version