கூலி தொழிலாளியின் தவறான முடிவு !

தெற்கு கடையத்தைச் சேர்ந்த மூதாட்டி சிவகாமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரம்மநாயகம் பணம் கேட்டுள்ளார். மூதாட்டி பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த தொழிலாளி சிவகாமியை சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்த நகைகளை பறித்து சென்றுள்ளார். மூதாட்டி கத்தி கூச்சலிட்டதையடுத்து கூலித்தொழிலாளி நகைகளை அருகில் உள்ள தொட்டியில் போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், போலீஸ் கைது செய்துவிடுவார்களோ என அச்சமடைந்த கூலித் தொழிலாளி பூச்சி மருந்தை அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Exit mobile version