திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 81 லட்சம் கொள்ளை!

தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய தீவிர வாகன சோதனை நடைபெற்றது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என வடக்கு மண்டல ஐஜி தெரிவித்த நிலையில் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களை கண்துடைப்புக்காக வாகன சோதனையில் ஈடுபடுவதாகவும் கொள்ளையடிக்கப்பட்ட பின் ஏடிஎம் மையத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அளிப்பது கேலிக்கூத்தானது என பொதுமக்கள் விமர்சித்துள்ளனர். அதேநேரத்தில் கொள்ளையர்களை பற்றி துப்பு துலக்க டி.ஐ.ஜி தலைமையில் 5 மாவட்ட எஸ்.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version