எட்டு கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை !

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த மணவூர் ரயில் நிலையம் அருகே
அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
பஞ்சர் போடும் கடை, ஸ்வீட் கடை, பங்க் கடை, ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் அலுவலகம்
மற்றும் மளிகை கடை உள்ளிட்ட எட்டு கடைகளின் பூட்டை உடைத்ததில் பஞ்சர் கடையில் 2000 ரூபாயும் ராமதாஸ் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது. இது குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version