ஸ்டாலின் விரக்தியில் உள்ளார் – டிடிவி கிண்டல்

மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, தொண்டர்களிடையே உரை நிகழ்த்தினார். அப்போது நாடுமுழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மோடி அரசை வீழ்த்த வேண்டும் என அரைகூவல் விடுத்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த சென்ற ஸ்டாலின் மற்றும் டி. ஆர். பாலு ஆகியோர், அமித்ஷாவிடம் பேசுவதற்காக காத்திருந்து , பின்னர் அவரை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டார். கருணாநிதியின் புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு அமித்ஷா வருவதாக கூறிவிட்டு பின்னர் வேறு ஒருவரை அனுப்ப முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதனால் கோபமான ஸ்டாலின், விரக்தியில் பா.ஜ.கவிற்கு எதிராக பேசியதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தலைமைக்கான பண்பாக தெரியவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Exit mobile version