ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி பிடிக்க முயற்சி செய்தபோது ஓட்டுனர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். லாரியை சோதனையிட்டதில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் இருந்தன.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீசார் லாரி ஓட்டுநரையும், லாரியின் உரிமையாளரான பாலுவையும் தேடி வருகின்றனர். செம்மரக்கட்டைகளில் வனத்துறை மற்றும் காவல்துறையினரின் பதிவு எண் உள்ளதால், சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை திருடி வந்திருக்கின்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Exit mobile version