திருவள்ளூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளான். சோழவரம் அடுத்த காட்டூரை சேர்ந்த சதீஷ் என்ற சிறுவன் செங்குன்றம் அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில், தமது நண்பர்களுடன் கொசஸ்தலை ஆற்றில் குட்டை போல தேங்கியிருந்த தண்ணீரில் குளிக்க சென்ற சதீஷ், குட்டை நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.

இதையடுத்து அவரின் நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சேற்றில் சிக்கிய சதீஷை சடலமாக மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version