பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால் கோல் நாட்டு விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகரத்தில் அம்மாவின் எண்ணம் நிறைவேறும் தருவாயில் இருப்பதாக தெரிவித்தார். பால் கலப்பட விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது , பாலில் கலப்ப்டம் செய்யும் நிறுவனங்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. எனவே தப்பு செய்கிறவர்கள் தங்களை திருத்திக்கொண்டு நல்ல பாலை வழங்கினால் நல்லது என எச்சரித்தார்.

Exit mobile version