பட்டாசு தொழிலை காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பட்டாசு தொழிலை காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாய் மற்றும் பரிசு தொகுப்பை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். சிவகாசி நகரம் மற்றும் நாரணாபுரம், விஸ்வநத்தம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அமைச்சர் பொங்கல் சிறப்புத் தொகுப்பை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எப்போது, இடைத்தேர்தல் வந்தாலும் பொதுத்தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றார்.

Exit mobile version