தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி அலை வீசுகிறது: ராஜேந்திர பாலாஜி

தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அலை வீசுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஓட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாலசமுத்திரம், குறுக்குச்சாலை, வெங்கடேசபுரம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், உழைக்கின்ற சமுதாயத்தைத் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடர வேண்டும் என்று எட்டு கோடி தமிழ் சமுதாயம் நினைக்கிறது என்று குறிப்பிட்டதுடன் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி அலை வீசுவதாகத் தெரிவித்தார்.

Exit mobile version