பட்டாசு ஆலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த காக்கிவாடன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று, வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் 3 பேர் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்கள் 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version