தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி முடிவு

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இவ்வாறு அவர் பதிலளித்தார்.

காகிதத்தில் எதையோ எழுதிக் கொடுத்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் யாரும் அமைச்சர்களாக இருக்க முடியாது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

அண்மையில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவை சேர்ந்தவர்கள் 93 சதவீதம் வரை வெற்றி பெற்று இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், தங்கள் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதற்கு இதுவே உதாரணம் என்றார்.

காவிரி படுகையில் எந்தவொரு அணை கட்டுவதாக இருந்தாலும், அதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எல்லாம் அனுமதி அவசியம் என்று அவர் கூறினார்.

மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Exit mobile version