கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தாள் விழாவினை ஒட்டி, பொதுச்செயலாளர் அறிக்கை!

கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு

கப்பலோட்டிய தமிழன் திரு. வ.உ. சிதம்பரனார் அவர்களின் 152 – ஆவது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்!
5.9.2023 செவ்வாய் கிழமை

இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவரும் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 152-ஆவது பிறந்தநாளான 5.9.2023 – செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடராத்தில் உள்ள திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுடைய நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,

      திரு. என். தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., அவர்கள்

கழக அமைப்புச் செயலாளர்

முன்னாள் அமைச்சர்.

      திருமதி பா. வளர்மதி அவர்கள்

கழக மகளிர் அணிச் செயலாளர்

கழக செய்தித் தொடர்பாளர்

முன்னாள் அமைச்சர்

     திரு. கடம்பூர் சி. ராஜூ எம்.எல்.ஏ., அவர்கள்

கழக அமைப்புச் செயலாளர்

தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

முன்னாள் அமைச்சர்

     திரு. ப. மோகன் அவர்கள்

கழக அமைப்புச் செயலாளர்

முன்னாள் அமைச்சர்

      திரு. எஸ்.பி. சண்முகநாதன் அவர்கள்

தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

முன்னாள் அமைச்சர்

     திரு. சி.த. செல்லப்பாண்டியன் அவர்கள்

கழக அமைப்புச் செயலாளர்

முன்னாள் அமைச்சர்

     திரு. என். சின்னத்துரை அவர்கள்

கழக அமைப்புச் செயலாளர்

கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர்

     திரு. எஸ். சரவணபெருமாள் அவர்கள்

கழக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்

உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. கடம்பூர் சி. ராஜூ எம்.எல்.ஏ தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும். முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும். கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும், பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version