அதிமுகவில் இருந்து இருவர் நீக்கம்! – பொதுச்செயலாளர் அதிரடி!

அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்ட தென்சென்னை மாவட்ட கழக நிர்வாகிகள் இருவரை கழகத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கேட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த ஆயிரம் விளக்கு வடக்கு பகுதிக்கழக மாவட்ட பிரதிநிதி ஜான்கென்னடி இன்று முதல் கழகத்தின் உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளார். இதேபோல் ஆயிரம் விளக்கு வடக்கு பகுதியை சேர்ந்த 111வது கிழக்கு வட்டக் கழக செயலாளர் சுதாகர் பிரசாத்தும் இன்று முதல் கழகத்தின் உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்று கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version