தமிழகத்தையே உலுக்கிய வழக்கு – காவல்துறை எடுத்த அதிரடி!

அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை 7 மாதங்களாக சிலர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் 17 பேரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அவர்களுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் மறுத்து விட்டனர். இந்தநிலையில் 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்களை  தடுப்பு காவல் பிரிவின் கீழ் சிறையில் அடைக்க, சென்னை மாநகர காவல்ஆணையர் விஸ்வநாதன் உத்தர விட்டுள்ளார்.

Exit mobile version