மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பரோட்டா மாஸ்டர் கைது

மயிலாடுதுறை அருகே பதின்பருவ சிறுமியை கர்ப்பமாக்கிய நபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சாத்தனூரைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் செந்தில்குமார், அதேப் பகுதியைச் சேர்ந்த 16 வயது பதின்பருவ சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

இதையடுத்து செந்தில்குமார் மீது போக்சோ சட்டம் மற்றும் சிறுமிக்கு கொலை மிரட்டல் உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் சிறையில் அடைத்து உள்ளனர்.

Exit mobile version