சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

வயிற்று வலிக்காக சிகிச்சை பெற வந்த சிறுமியை பரிசோதனை செய்வதாக கூறி, பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மருத்துவரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வயிற்று வலிக்கு சிகிசை பெற வந்த 13 வயது சிறுமியை பரிசோதனை செய்வதாக கூறி, பாலியல் தொல்லை அளித்ததாக, புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் ராஜேந்திரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என மருத்துவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றாத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, போக்சோ சட்டத்தில் இருந்து மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் முழுமையாக விடுவிக்கப்படுள்ளதாக மனுதரார் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார். வழக்கை எதிர்கொள்ளும்படி மருத்துவருக்கு உத்தரவிட்டார்.

Exit mobile version