சிறுமிக்கு பாலியல் தொல்லை – முதியவர் கைது

சென்னை சூளைமேட்டில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக 57 வயது மதிக்கத்தக்க குமார் என்பவரை சூளைமேடு போலீசார் கைது செய்தனர்.

சென்னை சூளைமேட்டில் உள்ள பெரியார் பாதை தெருவில், வீட்டின் தரைதளத்தில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தையை, அதே அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் குமார், மேல் தளத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைப் பார்த்த உறவினர்கள் சிறுமியின் உறவினர்கள், பதறி அடித்துக்கொண்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், 57 வயது மதிக்கத்தக்க குமார கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version