சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை !

சேலம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த சசிகுமார், 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரை தொடர்ந்து மிரட்டியதால் கடந்த 4 ஆம் தேதி சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததன் பேரில், சசிகுமார் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் சசிகுமாரை கைது செய்யாமல் போலீசார் அலட்சியம் காட்டி வந்ததால், பெண்ணின் தந்தை காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். விடியா திமுக அரசின் திறனற்ற ஆட்சி நிர்வாகத்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லா சூழல் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

Exit mobile version