சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 2 முதியவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேடசந்தூர் அடுத்த வடமதுரை அருகே ஆர்.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 13வயது மகள் வீட்டில் தனிமையில் இருப்பதை அறிந்து, அவருக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த முதியவர்கள் பெருமாள் மற்றும் குருநாதன் ஆகியோரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இவர்கள் மூவரும் சிறுமியை அவ்வப்போது தனியே அழைத்து சென்றது குறித்து சிறுமியின் பெற்றோரிடம் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரிக்கையில், தொடர்ந்து 8 மாதமா மூவரும் மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கதறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேரையும் விசாரித்த போலீசார், குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்தனர்.

Exit mobile version