5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தில், 5 வயது சிறுமியை பாலியல் வண்புணர்ச்சி செய்த 16 வயது சிறுவன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். புதுநல்லூர் கிராம பகுதியை சேர்ந்த தனபால் என்பவரின் மகன், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் 5 வயது மகளை, பாட்டு கேட்கலாம் என கூறி அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் வண்புணர்ச்சி செய்துள்ளார்.

சிறுமியை அவரது தாய் தேடி கொண்டிருந்தபோது, இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அச்சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.

Exit mobile version