சென்னையில் பெண் உட்பட 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒரு பெண் உட்பட 12 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக,தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சென்னையை சேர்ந்த 12 பேரை, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து, 12 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Exit mobile version