தனக்குதானே கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் ஒட்டிய கட்டிட தொழிலாளி

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அன்பரசன், கட்டட வேலை செய்து வருகிறார். நேற்று மது அருந்திவிட்டு, வீட்டிற்கு சென்ற அவர், தனது மனைவி அம்சவேணியிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தான் இறந்துவிட்டதாக தனது புகைப்படத்தை கொடுத்து, கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அச்சடித்து, ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார். இதைக்கண்ட அன்பரசனின் உறவினர்கள், உடனடியாக விசாரித்தனர். அப்போது, எலி மருந்து குடித்து அவர், தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அன்பரசன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Exit mobile version