ஜல்லிக்கட்டு: ஈரோட்டில் முதல் முறையாக திமிரி வரும் காளைகள்

கொங்கு மண்டலமான ஈரோட்டில் முதல்முறையாக விமர்சையாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

ஈரோட்டின் ஏ.இ.டி பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களிப்பதற்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டியை அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்தனர். முதலாவதாக கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.

Exit mobile version