ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 2 லட்சம் பறிமுதல்

ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஈரோடு வில்லரசம்பட்டியில், அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜித்தின் என்பவர் கேரளாவிலிருந்து, ஈரோட்டிற்கு ஜவுளி வாங்க ஆவணங்கள் இன்றி, 1 லட்சம் ரூபாயை எடுத்து வந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதே போல், சரவணன் என்பவர் கொண்டு சென்ற 73 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

Exit mobile version