முதன் முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டால் களைகட்டும் மாவட்டம்

ஈரோட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முதன் முறையாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த, ஜல்லிக்கட்டு பேரவை, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியர் கதிரவன் அனுமதி வழங்கினார். வரும் 19ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், போட்டியில் 100 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். ஈரோடு மாநகரில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் பொதுமக்களும், இளைஞர்களும் உற்சாகமாகியுள்ளனர்.

Exit mobile version