டெல்லி வெள்ள நீரில் சிக்கிய பேருந்து

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் காலையில் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். ஹனுமன் மந்திர் பகுதியில் அரசு பேருந்து ஒன்று வெள்ள நீரில் சிக்கியது. பயணிகள் கீழே இறங்க முடியாததால் மீட்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 30 பயணிகள் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

Exit mobile version