'காவு வாங்கும் கள்ளக் காதல்' – மனைவி தலையை வெட்டிய கணவன்…

கர்நாடகா மாநிலம் சிக்மங்களூரு அருகே உள்ள சிவானி கிராமத்தைச் சேர்ந்த சதீஸ் – ரூபா தம்பதிக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ரூபாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருடன் நட்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நட்பு பற்றி கணவர் சதீஸ்க்கு தெரிய வந்துள்ளதையடுத்து, அவர் மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும், கணவருக்கு தெரியாமல் ரூபா, அந்த ஆண் நண்பரை அடிக்கடி ரகசியமாக சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், வெளியூர் சென்றுவிட்டு கடந்த 9 ஆம் தேதி வீடு திரும்பிய சதீஸ், வீட்டில் தனது மனைவி ரூபா மற்றும் அந்த ஆண் நண்பர் இருவரையும் ஒன்றாக சேர்த்து பார்த்துள்ளார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த சதீஸ், இருவரையும் சராமாரியாக தாக்கி உள்ளார். மேலும் கடும் ஆத்திரத்தில்,
அருகில் கிடந்த கத்தியை எடுத்து, இருவர் மீதும் சரமாரியாக தாக்கத் தொடங்கி உள்ளார். இதில், படுகாயம் அடைந்த அந்த ஆண் நண்பர் அலறியடித்துக்கொண்டு, தப்பித்து ஓடியுள்ளார். இதனிடையே, கடும் விரக்தியுடன் காணப்பட்ட சதீஸ், கோபம் தீரும் அளவுக்கு அவரை தாக்கிவிட்டு, மனைவி ரூபாவின் தலையை வெட்டி உள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ரூபா சடலமாக சரிந்து விழுந்துள்ளார்.

சிறுது நேரத்திற்குப் பிறகு நிதானத்திற்கு வந்த சதீஸ், தனது மனைவி ரூபாவின் தலையை ஒரு பையில் வைத்து, காவல் நிலையத்தில் சரணடைய சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று சரணடைந்தார். இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய ரூபாவின் ஆண் நண்பர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, மனைவி தலையுடன் சதீஸ் போலீசில் சரணடைந்த சம்பவம், கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Exit mobile version