தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் – எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் கடிதம்

கர்நாடகாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் வழிப் பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள தமிழ் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், தமிழ் வழிக் கல்வியை பயிற்றுவிக்கும் புதிய தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், வேறு மொழிகளுக்கு மாற்றப்பட்ட தமிழ் பள்ளிகளை மீண்டும் தமிழ் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கடித்தத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version