கர்நாடகாவில் கார்கள் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் 13 பேர் பலி

கர்நாடகாவில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பியபோது நேரிட்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேரிகையிலிருந்து கர்நாடக மாநிலம் தர்மசாலா கோவிலுக்கு கார் ஒன்றில் 13 பேர் சென்றுள்ளனர். கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது, குனிகல் என்னுமிடத்தில் எதிரே வந்த கர்நாடகத்தை சேர்ந்த மற்றொரு கார் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 9 மாத குழந்தை உள்பட தமிழகத்தை சேர்ந்த 10 பேரும், கர்நாடக மாநில பக்தர்கள் வந்த காரில் 3 பேரும் என 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Exit mobile version