கர்நாடகாவில் எங்கள் ஆட்சி நீடிக்கும்-குமாரசாமி

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்த குமாரசாமிக்கு, மாவட்ட சார் ஆட்சியர் பிரசாந்த், காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, கர்நாடகாவில் தாமரை ஆபரேசன் குறித்து கவலை இல்லை என தெரிவித்தார். கர்நாடக அரசியலில் நிச்சயமற்ற சூழ்நிலை இல்லை என்று கூறிய அவர், தனது தலைமையிலான ஆட்சி, 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். எம்.எல்.ஏக்கள் சிலர் எதிர்கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் தவறானது என குமாரசாமி கூறினார்.

Exit mobile version