எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் செல்லும் அதிமுக அரசு – எஸ்.பி. வேலுமணி

கோவை மாவட்டம் ஆனைமலையில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், அரசை யாராலும் அசைக்க முடியாது என்று, அமைச்சர் வேலுமணி குறிப்பிட்டார். திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், முதலமைச்சர் ஆகி விட்டதாக கனவு காண்பதாக அவர் விமர்சித்தார். அவருக்கு முதலமைச்சர் ஆகும் எண்ணம் மட்டுமே இருப்பதாகவும், மக்கள் நலனில் அக்கறை இல்லை என்றும் வேலுமணி சாடினார்

Exit mobile version