தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்த எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் ஆய்வு செய்தார்.

குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரானா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசிய அவர், தடுப்பூசி செலுத்தும் பணியினை துரிதபடுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதில் பெரும் பங்கு வகித்ததை நினைவு கூர்ந்த எஸ்.பி.வேலுமணி, நோய் பரவலை கட்டுபடுத்த மக்களும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Exit mobile version