மதுபானக் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்: இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்!

புதுச்சேரி மாநிலம் லிங்கா ரெட்டிபாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான தீர்ந்த நிலையில் புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் ,லிங்கா ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு மூண்டுள்ளது.இதனால் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் லிங்காரெட்டி பாளையம் பகுதியில் வீடு புகுந்து அங்கு இருந்தவர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த லிங்காரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 50க்கு மேற்பட்டோர் பதிலுக்கு அப்பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Exit mobile version