அரக்கோணம் அருகே, பழிக்குப் பழியாக இளைஞர் வெட்டிக் கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, பழிக்குப் பழியாக இளைஞரை வெட்டிக் கொன்ற 6 பேரை, போலீஸார் கைது செய்தனர்.

பள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கௌதம் என்பவர் கடந்த 20ஆம் தேதி அங்குள்ள விவசாய நிலத்தில், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா நிகழ்விடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொலை தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தே பகுதியைச் சேர்ந்த நிஷாந்த், சரத்குமார், திலீப், பகத்சிங் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார், பார்வேந்தன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

விமல் என்பவர் 2019 டிசம்பரில் கொலை செய்யப்பட்டதாகவும், அதில் தொடர்பிருந்ததால் பழிக்குப்பழியாக கௌதமை கொன்றதாகவும் விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 

 

Exit mobile version